இனி சுகாதார தரவுகளை வெளியிடுவதில்லை! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி தீர்மானம்
எதிர்வரும் பெப்ரவரி 18 முதல் சுகாதார தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
அரசாங்கம் தனது கவலைகளுக்கு போதுமான பதிலை வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி, தொடர்ந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
GMOA முக்கிய தீர்மானம்
அத்துடன், சுகாதார மருத்துவ அதிகாரிகளின் தலையீடு மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் சமூக சுகாதார நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சுகாதார அமைச்சகத்திற்கு சமர்ப்பிப்பதைத் தவிர்ப்பதாகவும் GMOA தெரிவித்துள்ளது.

தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூக சுகாதார சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் மேற்பார்வை கடமைகளை நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.