மருத்துவர்கள் தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில்...
இன்றைய தினம் காலை 8 மணி முதல் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமால் விஜேசிங்க இந்த தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளார்.
ஐந்து முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கக் கூடிய அபாயம்
அதன்படி மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் வருமாறு:
1. அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை நிலையங்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் கிடைக்காத மருந்துகளை வெளியிலுள்ள மருந்தகங்களில் வாங்குவதற்கான சீட்டுகள் வழங்கப்படமாட்டாது.
2. மருத்துவமனை அமைப்பில் கிடைக்காத ஆய்வக பரிசோதனைகளை வெளியிலுள்ள ஆய்வகங்கள் அல்லது தனியார் மருத்துவமனைகளில் செய்ய பரிந்துரை அல்லது சீட்டு வழங்கப்படமாட்டாது.

3. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கையை வழங்க முடியாத நிலையில் அல்லது அங்கீகாரம் பெறாத மருத்துவர்கள் இல்லாத சூழலில், அரசு மருத்துவமனைகளில் புதிய பிரிவுகளை தொடங்க அனுமதி வழங்கப்படமாட்டாது.
4. சில சந்தர்ப்பங்களில் அரசியல் தேவைகள் அல்லது அரசியல் அழுத்தங்களின் அடிப்படையில் நடத்தப்படும் சிகிச்சைகள் நிலையங்களுக்கு மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது.
5. எந்தவொரு மருத்துவமனை, அல்லது வெளிநோயாளர் பிரிவில் நோயாளியை பரிசோதிக்கும் போது மருத்துவருக்கு உதவியாக ஆதரவு பணியாளர் வழங்கப்படாவிட்டால், அந்த இடங்களில் மருத்துவர்கள் பணியிலிருந்து விலகுவார்கள்.
இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பணியாற்றுவதற்கு தேவையான உரிய பின்னணியை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படாவிட்டால் இலவச சுகாதார சேவை பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்புக்கான பொறுப்பினை சுகாதார அமைச்சும் சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அப்பாலான கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் தொழிற்சங்க போராட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க போராட்டங்களினால் ஒட்டுமொத்த சுகாதார துறையும் ஸ்தம்பிக்க கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டாக்டர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri