கனேடிய அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்
இந்திய தயாரிப்பான கோவேக்சின் மற்றும் சீனத் தயாரிப்பான சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் தமது நாட்டுக்குள் வரலாம் என கனடா அறிவித்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் குறித்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் கனடா வரமுடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுவரை பைசர், மொடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராசெனகா ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே கனடாவில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர்‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது.
இதையடுத்து குறித்த தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் கனடாவுக்கு வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,