இந்தியாவிற்கு கச்சதீவை வழங்கினால் பிரச்சினை தீராது: அமைச்சர் டக்ளஸ் உறுதி

Douglas Devananda India Kachchatheevu
By Kajinthan Apr 12, 2024 08:48 AM GMT
Report

சீனாவை விட இந்தியா முதன்மையானது என்றாலும் இந்தியா கோருகின்றது என்பதற்காக கச்சதீவை (kachchatheevu) வழங்கினால் பிரச்சினை ஒன்றும் தீரப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Dougalas Devananda) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்று (11.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

புத்தாண்டை கொண்டாட ஐரோப்பா பறந்த இலங்கை அரசியல் பிரமுகர்கள்

புத்தாண்டை கொண்டாட ஐரோப்பா பறந்த இலங்கை அரசியல் பிரமுகர்கள்

ஒப்பந்தம் 

மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் சீனாவை விட இந்தியாவின் உறவை விரும்பும் நிலையில் கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கினால் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் பிரச்சினை தீரப் போவதில்லை.

giving-kachchatheevu-to-india-not-solve-problem

ஒருவேளை கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கி விட்டால் இந்தியா மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்கள் அதன் எல்லையில் இருந்து ஒரு கடல் மைல் எல்லைக்கு அப்பால் சென்று கடற்றொழிலில் ஈடுபட முடியாது. 

கச்சதீவில் 1974ஆம் ஆண்டு தொடக்கம் இருநாட்டு கடற்றொழிலாளர்களும் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடும் இடமாக காணப்பட்ட நிலையில் 1976ஆம் ஆண்டு இரு நாடுகளும் இணைந்து செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையிடம் கச்சதீவு ஒப்படைக்கப்பட்டது.

கச்சதீவை இலங்கை பெற்றதால் கச்சதீவு போல் வளமான 80 மடங்கு கடலை இந்தியாவுக்கு தாரை வார்த்து விட்டோம். எனினும், தீவகப் பகுதிகளில் இந்தியாவின் மீள் புதுப்பிக்க சக்தி திட்டம் வர இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனாவின் திட்டம் என்றால் எதிர்ப்பு வருவது ஏன் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு “முதலில் தீவகத்தில் மீள் புதுப்பிக்க சக்தி திட்டத்தை சீனா தமக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தது. நான் அமைச்சரவையில் அதனை மறுத்து இந்தியாவுக்கு வழங்குங்கள் என கோரிக்கை விடுத்தேன்.

இந்தியாவின் திட்டங்கள்

நான் அவ்வாறு கோரிக்கை முன்வைத்ததற்கான காரணம் என்னவெனில் எமக்கு கிடைக்கின்ற அபிவிருத்தி திட்டங்களை தடுக்காது அதனை மக்கள் அபிவிருத்தி ஆக்குவதே எனது நோக்கம்.

வடக்கு மாகாணத்தை (Northern Province) பொறுத்தவரையில் சீனாவைக் காட்டிலும் இந்தியாவின் திட்டங்களை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

giving-kachchatheevu-to-india-not-solve-problem

இலங்கை - இந்திய (India - Sri Lanka) உறவுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவு நம்பிக்கையானது. அதன் காரணமாகவே எல்லை தாண்டும் கடற்றொழிலாளர் பிரச்சினையையும் பேசி தீர்ப்பதற்காக புதுச்சேரி மாநில முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். 

அங்கு தேர்தல் இடம்பெற உள்ளதால் தற்போது செல்வதற்கான ஏற்பாடுகள் இல்லை தேர்தல் முடிவுகளில் அரசாங்கம் ஒன்று அமைந்ததன் பின்னர் பேசலாம் என எண்ணியுள்ளேன்.

எனவே, கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கினால் பிரச்சினை தீர்ந்து விடும் என நினைப்பது தவறு. இந்த விடயம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டிய விடயம்” என அவர் தெரிவித்துள்ளார்.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் திருகோணமலையில் பலர் கைது

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் திருகோணமலையில் பலர் கைது

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விசேட புத்தாண்டு கண்காட்சி

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விசேட புத்தாண்டு கண்காட்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US