பேருவளை சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
பாதுகாப்பற்ற மின்சார இணைப்புடன் ஏற்பட்ட தாக்கமே பேருவளையில் உயிரிழந்த 5 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணம் என பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
மின்சார அதிர்ச்சியின் தீவிரம் குழந்தையின் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களிலிருந்து தெளிவாக தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பெற்றோர்களில் கடமை
மின்னேற்றியில் பொருத்தியிருந்த கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியதில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் இன்றையதினம் பேருவளை பகுதியில் உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில் சிறுமி மயங்கிக் கிடப்பதை கண்ட அவரது சகோதரர், அவரை உடனடியாக பேருவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை மின்சாரம் தாக்கி ஒரு குழந்தை இறப்பதற்கு 3 – 15வீத வாய்ப்புகள் இருப்பதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தாக்கம் இதயத்தை அல்லது, மூளையை பாதிக்கலாம் என்றும், நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது குழந்தைகளை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதுடன், இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுப்பதும் பெற்றோர்களில் கடமை எனவும் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan