மாத்தறையில் லொறி மோதி பெண் பரிதாப மரணம்!
மாத்தறை - ஹக்மன வீதியின் துடாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(13.3.2026) இடம்பெற்றுள்ளது.
வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த பெண் பாதசாரி மீது, மாத்தறை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் பலத்த காயமடைந்த மேற்படி பெண், உடனடியாக மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri