கிளிநொச்சியில் நாய் கடிக்கு இலக்கான சிறுமிக்கு நேர்ந்த கதி
விசர் நாய் கடிக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்(Teaching Hospital Jaffna) சிகிச்சைப் பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி (Kilinochchi) - குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியே நேற்றையதினம் (26.06.2024)) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
தீவிர சிகிச்சை
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கானதையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |