ஜெர்மனியில் புதிய பிரச்சினை! அதிகரித்துள்ள வீடுகளுக்கான பற்றாக்குறை
ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
குறிப்பாக ஜெர்மனியின் முக்கிய நகரங்களான பெர்லின் மற்றும் முனிச் ஆகிய நகரங்களில் இந்த வீடு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 2.56 மில்லியன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.
மோசமடையும் நிலை
இதன்படி, ஒரு ஆண்டுக்கு குறைந்தது 320,000 புதிய வீடுகள் வீதம் கட்டப்பட வேண்டும்.
இவ்வாறிருக்க, 2023 இல், ஜெர்மனி முழுவதும் சுமார் 294,400 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
புதிய வீடுகள் விரைவில் கட்டப்படாவிட்டால், ஜெர்மனியில் வீடு பற்றாக்குறை தொடர்ந்தும் மோசமடையும் என்பதோடு குறைந்த விலையில் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
