ஹிட்லர் தொடர்பிலான கருத்துக்கு ஜெர்மனிய தூதரகம் அதிருப்தி
சர்வாதிகாரி ஹிட்லரை தொடர்புப்படுத்தி இலங்கை அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு ஜெர்மனிய தூதரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான ஜெர்மனிய தூதுவர் ஹொல்கர் சியுபர்ட் அதிருப்தியை வெளியிட்டு டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
சர்வாதிகாரி ஹிட்லரைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் ஆட்சி செய்ய வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என அமைச்சர் திலும் அமுனுகம கண்டியில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி ஹிட்லரைப் போன்று சர்வாதிகார அடிப்படையில் செயற்பட வேண்டுமென இந்த நாட்டின் 69 லட்சம் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து குறித்து ஜெர்மனிய தூதுவர் ஹொல்கர் அதிருப்தி வெளியிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
மில்லியன் கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு ஹிட்லரே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடோல்ப் ஹிட்லரை எந்தவொரு அரசியல்வாதியும் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
