உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்க ஜெர்மனி நிதியுதவி: வெளியானது புதிய தகவல்
ரஷ்யாவுடனான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி அளித்து வருவதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய நாடு ஒன்று உக்ரைனுக்காக மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன் கொள்முதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 90 மில்லியன் யூரோக்கள் (103 மில்லியன் டொலர்) ஆகும்.
இதில் பயன்படுத்தப்படும் 'ஷ்ரைக்' (வகை 'ஃபர்ஸ்ட்-பர்சன்-வியூ' (FPV) ட்ரோன்கள் உக்ரைனின் முன்னணி உற்பத்தியாளரான 'ஸ்கைஃபால்' நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு காரணங்கள்
இந்த ட்ரோன்களில் அமெரிக்காவின் 'ஆட்டேரியன்' பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.

இது பறக்கும் இறுதி கட்டத்தில், நகரும் இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்காணித்துத் தாக்கும் திறன் கொண்டது.
ஆட்டேரியன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோரென்ஸ் மேயர் கூறுகையில்,"இந்த ஒப்பந்தத்தின்படி சில ட்ரோன்கள் ஏற்கனவே உக்ரைன் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
மீதமுள்ளவை இந்த ஆண்டிற்குள் அனுப்பி வைக்கப்படும்." இந்த ஒப்பந்தத்தில் ஜெர்மனியின் பங்களிப்பை ஸ்கைஃபால் நிறுவனம் உறுதிப்படுத்திய போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.
இதேபோல் ஜெர்மனி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகங்களும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதுமட்டுமின்றி, பல்வேறு மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியுடன் இந்த ஆண்டு உக்ரைனுக்கு மொத்தம் 1,00,000 ட்ரோன்களை வழங்க ஆட்டேரியன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில் அமெரிக்க பென்டகனின் 50 மில்லியன் டொலர் ஒப்பந்தமும் அடங்கும். மேலும், பிரித்தானியாவும் இந்த ஆண்டு உக்ரைனுக்கு 1,50,000 ட்ரோன்களை வழங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 11 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan