ஜேர்மனியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர் உடனடியாக நாடு கடத்தல்
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் புகலிடம் கோரிய நபர் இலங்கைக்கு நுழையும் நோக்கில் விமான நிலையம் வந்துள்ளார்.
அவர் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் பணியாற்றும் நோக்கில் அவர் இலங்கை வந்துள்ளார்.
நாடு கடத்தல்
அவரது குடிவரவு அனுமதிக்காக, இலங்கை கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதியுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள குடிவரவு அதிகாரியை சந்தித்துள்ளார்.

எனினும் அங்கு அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் Continues Discharge Certificate மற்றும் வணிகக் கடலோடியாகத் தேவையான பிற ஆவணங்கள் போதுமானதாக இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது குடிவரவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு டோஹாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri