இந்தோ-பசுபிக்கை குறிவைத்த ஜெர்மனி: இந்தியாவின் நகர்வால் சீனாவிற்கு புதிய சவால்
இந்திய விமானப்படைக்கும், ஜெர்மன் விமானப்படைக்கு இடையில் விசேட கூட்டுக்குப்பயிற்சி திட்டம் தொடர்பான முன்மொழிவு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெர்மன் விமானப்படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ் இந்திய விமானப்படையுடன் (IAF) கூட்டுப் பயிற்சி திட்டத்தை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீன போர்க்குணம் குறித்து ஜேர்மனி அக்கறை கொண்டுள்ளது எனவும், ஜேர்மன் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் இருப்பதால் இலவச கடல் பாதைகளில் மூலோபாய ஆர்வத்தை வலுப்படுத்திக்கொள்ள இந்த திட்டம் முன்மொழியப்பட்டதாக ஜேர்மன் தரப்பு தெரிவித்துள்ளது.
IAF விமானப் போர் மேம்பாட்டு

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ஜெர்மனி தனது எதிர்கால இருப்பில் கவனம் செலுத்துவதால், பிரான்சைப் போலவே பெர்லினையும் அதன் கடற்படை மூலோபாயத்தின் மையமாக புது டெல்லி பார்க்கிறது என்று சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக, இந்தியவின் பாதுகாப்புச் செயலர் கிரிதர் அரமனே, பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌஹான், கடற்படைத் தலைவர் (சிஎன்எஸ்) அட்மிரல் ஹரி குமார் ஆகியோருடன் பாதுகாப்பு உறவுகள் மற்றும் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி ஜேர்மன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த வியாழனன்று, ஜேர்மன் விமானத் தளபதி குவாலியரில் உள்ள IAF இன் தந்திரோபாய மற்றும் விமானப் போர் மேம்பாட்டு நிறுவனத்திற்குச் விஜயம் மேற்கொண்டதாகவும், அங்கு அவர் ஜெர்மனியில் உள்ள பல்வேறு பயிற்சித் துறைகள் குறித்த தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய 12 மாதங்களில், பிரதமர் நரேந்திர மோடியும், ஜெர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸும் பலமுறை சந்தித்துப் பேசியதால், உலக நாடுகளுக்கு இடையேயான பன்முக உறவுகளின் வளர்ச்சியில் பரஸ்பர அர்ப்பணிப்பை மையமாகக் கொண்டு, இந்தியா-ஜெர்மனி இடையேயான மூலோபாய கூட்டுறவின் முக்கிய தூணாக பாதுகாப்பு உறவுகள் மாறியுள்ளது என ஜனநாயக நாடுகள் சபை கருத்து வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam