கத்தி குத்து தாக்குதல்களின் எதிரொலி : ஜேர்மனி அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு
ஜேர்மனி (German) நகரமொன்றில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனி அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட நாட்டவர்களை நாடுகடத்துவதை மீண்டும் தொடங்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
ஜேர்மனியிலுள்ள சோலிங்கன் (Solingen) நகரில், உள்ளூர் விழா ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்தார்கள்.
குறித்த தாக்குதல் நடத்தியவர் சிரியா நாட்டவர் என கூறப்படுகிறது.
தாலிபான்கள் ஆட்சி
அத்துடன், ஜூன் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவர், ஜேர்மன் பொலிஸார் ஒருவரைக் கத்தியால் குத்தியதில் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலியானார்.
இந்நிலையில், ஜேர்மனி குற்றப்பின்னணி கொண்ட ஆப்கான் நாட்டவர்களை நாடுகடத்துவதை மீண்டும் தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று(30) அதிகாலை, ஆப்கான் குற்றவாளிகள் 28 பேருடன் விமானம் ஒன்று Leipzig நகரிலிருந்து காபூலுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மனித உரிமைகள் தொடர்பிலான சந்தேகம் காரணமாக அந்நாட்டவர்களை நாடுகடத்துவதை ஜேர்மனி நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan