இலங்கையில் மண்சரிவு அபாயம்: இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் ஆரம்பம்
இலங்கையில் மண்சரிவு ஏற்படக்கூடிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 2 ஆயிரத்து 377 இடங்களில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இடங்கள் தொடர்பாக 529 இறுதி அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
மண்சரிவுகள்
மண்சரிவு ஏற்படக்கூடிய நிலையில் அடையாளம் காணப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய ஏழு மாவட்டங்களில் மொத்தம் 56 ஆராய்ச்சி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் நாடு முழுவதும் 1,322 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
செயற்கைக்கோள்களைப் படங்களைப் பயன்படுத்தி அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு இடங்களை அடையாளம் காணும் திட்டத்தையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri