ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கை : எதிர்பார்க்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் கருத்து
இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர், கடந்த 17 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையை தாம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்
குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தமது கட்சி அதன் கருத்தை வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையாளரின் அறிக்கை
அறிக்கையில், முதல் தடவையாக 1971 மற்றும் 1980 களின் பிற்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் கிளர்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணைகள் கோரப்பட்டுள்ளன.
முன்னதாக இறுதிப்போரின் போது இறந்த தமிழ் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் நினைவேந்தலுக்கு தமது ஆதரவை தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட நிலையிலேயே ஜெனீவா அறிக்கை வெளியாகியுள்ளது.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்தமுறை தேசிய மக்கள் சக்தியின் பங்கு அளப்பரியது என்ற வகையில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்த அந்தக்கட்சியின் கருத்து எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 13 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
