ஐ.நா. மனித உரிமைகள் சபை ஒருபோதும் இலங்கைக்குச் சவாலாக அமையாது: ஜனாதிபதி நம்பிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கைக்கு ஒருபோதும் சவாலாகவும், ஆபத்தாகவும் அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாநாட்டில் இலங்கை விவகாரங்களை விசேட குழு ஒன்று கையாளும் அதேவேளை, அந்த மாநாட்டில் இலங்கையின் நிலைப்பாட்டை அறிக்கையூடாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ''அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்கள் கடிதங்கள் அனுப்பியுள்ளன.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது எந்த நேரத்திலும் மீண்டும் தடை விதிக்கப்படும்! பகிரங்க எச்சரிக்கை |
கடிதத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்
இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், 6 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 316 தனிநபர்கள் மீதான தடை நீக்கத்துக்கும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் தீவிரமான ஆராய்வு
ஐ.நா மனித உரிமைகள் சபையின் மாநாட்டுக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீவிரமான ஆராய்வின் பின்னரே தடை நீக்கப்பட்டது'' என தெரிவித்துள்ளார்.