க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு (Photo)
2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளது.
கணிப்பான்கள் மற்றும் பேனா எழுத்துக்களை அழிப்பதற்கான வெள்ளை திரவம் என்பவற்றை பயன்படுத்துவதற்கு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் உட்பட இலத்திரனியல் உபகரணங்களை இந்த பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு வருதல் தண்டனைக்குரிய குற்றம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சை அனுமதி அட்டைகள் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு சிக்கல்கள் மற்றும் பிற பிரச்சினைகள் உள்ள மாணவர்கள் 011-2784208, 011278453, 011-3188350, 011-3140314, 1911 என்ற இலக்கங்களை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri