சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறித்து வெளியான போலித் தகவல்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் சமூக ஊடகங்களில் போலித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2024(2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

இந்த போலித் தகவல்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் கல்வி அமைச்சிற்கு அறிவித்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த விளக்கம் வெளியிடப்படுவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri