கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை
கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெளியாகிய கா.பொ.த.உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
முதல் இடம்
இதன்கீழ் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ்மேவின் ஹரிமீனுஜன் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 62வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கல்லடி உப்போடையினை சேர்ந்த பிலிப் ரைற்றஸ்மேவின்,சுகந்தி தம்பதிகளின் புதல்வனாவார்.
இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் உயிரியல்துறையில் கல்வி பயிலும் நாவற்குடாவினை சேர்ந்த யூட்நிமால் அனுஸ்ராம் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்புமாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 42வது இடத்தினையும் பெற்று மருத்துவதுறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றும் யூட்நிமால் -விஜயமோகனா தம்பதிகளின் புதல்வனாவார்.





பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam