2023 உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தல்
2023 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
இதற்கமைய, 2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை 2024 ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்: சட்டத்தரணி பகிரங்க குற்றச்சாட்டு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |