க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி எண் 1911 அல்லது 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் தெரிவிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொலைநகல், மின்னஞ்சல்
அத்துடன் 0112784422 என்ற தொலைநகல் எண் மூலமாகவோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் http://gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரியப்படுத்த முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்தது.

விடைத்தாள்கள் சேதம்
மேலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் எதற்கும் சேதம் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri