நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Parliament Election 2024
By Sajithra Nov 12, 2024 02:59 PM GMT
Report

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு 

அரசியலமைப்பின் 70ஆம் உறுப்புரையின் படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி | Gazette Regarding Convening Of Parliament

இதற்கமைய, 10ஆவது நாடாளுமன்றத்தின் 1ஆவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்படும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள 2024.11.12ஆம் திகதி, 2410/02 ஆம் இலக்க வர்த்தானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடைபெறவுள்ள தேர்தலில், பொது வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்களும் உள்ளடங்கலாக மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

புதிய நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில், சபையின் முதன்மைப் பொறுப்புகள் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாளில் குறிப்பிட்ட இருக்கை ஏற்பாடுகள் ஒதுக்கப்படாது, அவர்கள் விரும்பும் எந்த இருக்கையிலும் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.

தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை முன்னெடுப்பு

தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை முன்னெடுப்பு

அதிவிசேட வர்த்தமானி 

சபையில் செங்கோல் வைக்கப்படுவதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, அன்றைய தினம் முதல் அலுவலாக, செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

பின்னர், அரசியலமைப்பின் 64 (1) மற்றும் நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 ஆகியவற்றின் படி, சபாநாயகர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். அதைத் தொடர்ந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ உறுதிமொழி, அதன்பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி | Gazette Regarding Convening Of Parliament

மேலும், துணை சபாநாயகர் மற்றும் குழுக்களின் துணைத் தலைவர் ஆகியோர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சபாநாயகராக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நியமிக்கலாம். எவ்வாறாயினும், அந்த பதவிக்கு ஒரு உறுப்பினரை நியமிக்கும் முன்னர், அந்த உறுப்பினர் நியமனத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

சபாநாயகரின் பெயரை முறைப்படி முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த இரண்டு உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை சபாநாயகர் இருக்கையில் அமரவைப்பதற்காக, அவரை கரம்பிடித்து அழைத்துச் செல்வது நீண்டகால மரபாக உள்ளது அதன் பின்னரே சபாநாயகர், தமது உத்தியோகபூர்வ உறுதிமொழி அல்லது பதவிப் பிரமாணத்தை பொதுச்செயலாளர் முன் எடுத்துக்கொள்கிறார்.

சபாநாயகர் தெரிவு 

புதிதாக பதவியேற்ற சபாநாயகர், தமது இருக்கையில் அமர்வதற்கு முன்னர் சபைக்கு சுருக்கமாக நன்றி தெரிவிப்பது வழக்கமாகும். பின்னர் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளால் வாழ்த்துக் குறிப்புகள் வழங்கப்படும் இதைத் தொடர்ந்து, மீதமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன் தங்கள் அதிகாரப்பூர்வ உறுதிமொழி அல்லது சத்தியப் பிரமாணத்தை மேற்கொள்வார்கள்.

சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். நாடாளுமன்ற நடைமுறையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சில நிகழ்வுகள் உள்ளன. சபாநாயகர், துணை சபாநாயகர், குழுக்களின் துணைத் தலைவர் மற்றும் நாடாளுமன்றம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் போதே இரகசிய வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுகின்றன.

நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி | Gazette Regarding Convening Of Parliament

வாக்கெடுப்பின் போது, ஒரு தொடர்ச்சியான ஐந்து நிமிட கோரம் மணி, உறுப்பினர்களை தயார் செய்யும் வகையில் ஒலிக்கப்படும். நாடாளுமன்ற பொதுச்செயலாளர் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயரை எழுதி தாளில் கையெழுத்திட வேண்டும். பின்னர் உறுப்பினர்கள் வாக்குச் சீட்டை கவனமாக மடித்து வாக்குப்பெட்டியில் செலுத்துவார்கள்.

வாக்களிக்கும் முறையை தீர்மானிப்பதற்கும், எண்ணிக்கையை நடத்துவதற்கும் அதிகாரம் பொதுச்செயலாளரிடம் மட்டுமே உள்ளது. அவர் நாடாளுமன்ற மேசையில் உள்ள வாக்குகளை கணக்கிடுகிறார். எண்ணப்பட்ட பிறகு, பொதுச்செயலாளர் முடிவை சபையில் அறிவிப்பார். ஒரு வாக்குச் சீட்டில் உறுப்பினரின் கையொப்பம் இல்லாவிட்டால், அது செல்லாத வாக்காக கருதப்படும்.

சபாநாயகர் பதவிக்கு மூன்று உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டு, எந்த வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லையென்றால், குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு, புதிய சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 

மேலதிக தகவல் சிவாமயூரி 

நானாட்டான் மேய்ச்சல் தரை விவகாரத்தில் தொடரும் சிக்கல் நிலை

நானாட்டான் மேய்ச்சல் தரை விவகாரத்தில் தொடரும் சிக்கல் நிலை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US