பரேட் நிறைவேற்று சட்டம் தொடர்பான வர்த்தமானி: விளக்கமளிக்கும் இராஜாங்க அமைச்சர்
பரேட் நிறைவேற்று சட்டத்தை இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(20.03.2024) அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனு தாக்கல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த நிலையில் யாரேனும் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய 14 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்பின், உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
இதன்படி இந்த சட்டத்தை ரத்துச்செய்யும் செயன்முறையை நடைமுறைப்படுத்த சில வாரங்கள் செல்லும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |