கெஹெலியவின் அமைச்சு பதவி குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பதவி விலகல்
இந்நிலையில் சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியதுடன் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (06,02.2024) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
