தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்தார்.
புதிய வர்த்தமானி அறிவித்தல்
அதன் பிரகாரம் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை தொழில் ஆணையாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு சட்ட ரீதியாக சவால் விடுக்கப்படும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
