தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்தார்.
புதிய வர்த்தமானி அறிவித்தல்
அதன் பிரகாரம் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை தொழில் ஆணையாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு சட்ட ரீதியாக சவால் விடுக்கப்படும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
