தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்தார்.
புதிய வர்த்தமானி அறிவித்தல்
அதன் பிரகாரம் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை தொழில் ஆணையாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு சட்ட ரீதியாக சவால் விடுக்கப்படும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam