காசாவின் அழிவுக்கு இலங்கை தண்டிக்கப்படாததே காரணம்.. சர்வதேச அரங்கத்தின் குற்றச்சாட்டு

Human Rights Council Gaza
By Rakesh Sep 19, 2025 06:13 PM GMT
Report

16 வருடங்களுக்கு முன்னர் நடந்த உரிமை மீறல்களுக்காக இலங்கை இன்னமும் தண்டிக்கப்படவில்லை. இன்று காசாவில் நிகழ்த்தப்படும் மீறல்கள் - பிரயோகிக்கப்படும் உத்திகளுக்கும் இதுவே முன்னுதாரணம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், இத்தகைய பின்னணியில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயல்திட்டம் இன்றியமையாதது.

இது, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி - உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்தவும் மிக அவசியமானது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மகிந்தவிற்கு எதிராக வழக்கு தொடுத்தவரின் நிலை

மகிந்தவிற்கு எதிராக வழக்கு தொடுத்தவரின் நிலை

பல குற்றங்கள்.. 

"உலகளாவிய ரீதியில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பல அட்டூழியங்கள் குறித்த ஞாபகங்கள், சில வருடங்களில் வேறு புதிய மீறல் சம்பவங்களால் மாற்றி எழுதப்படும்.

காசாவின் அழிவுக்கு இலங்கை தண்டிக்கப்படாததே காரணம்.. சர்வதேச அரங்கத்தின் குற்றச்சாட்டு | Gaza War Sri Lanka Civil War Human Rights Com

ஆனால், மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அதனால் ஏற்பட்ட துயரம் என்பது முடிவற்றதாகும். தீர்வு அளிக்கப்படாத குற்றங்கள் அதனை ஒத்த எதிர்கால மீறல்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

இலங்கை அரசால் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. இதன்விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையால் கண்டறியப்பட்டதன் பிரகாரம் இந்தப் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் சட்டங்களுக்குப் புறம்பான விதத்தில் மனிதகுலத்துக்கு எதிராக மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன.

இருப்பினும், அவை இன்றளவிலே இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் சிலரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கான எந்தவொரு எதிர்விளைவும் இல்லாததன் காரணமாக இது சாத்தியமாகியிருக்கின்றது.

இலங்கையில் இதுவரை ஆட்சிப்பீடமேறிய அரசுகள் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளித்து விட்டு, அதிலிருந்து விலகிச் செயல்பட்டு வந்திருப்பதன் மூலம், எதனை செய்தாலும் பின்விளைவுகளின்றி மீண்டுவிடலாம் என்பதைக் காண்பித்து வந்திருக்கின்றன.

ஆகையால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன் இலங்கையால் நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்குரிய ஆணையை தற்போது நடக்கும் கூட்டத்தொடரில் புதுப்பிக்க வேண்டும்.

இலங்கையில் சுமார் 26 வருடகாலமாக நீடித்த உள்நாட்டு போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக இரு தரப்பினராலும் மிகமோசமான மீறல்கள் - குற்றங்கள் இழைக்கப்பட்டன.

ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் பரிதாபமாக மரணம்

ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் பரிதாபமாக மரணம்

இலங்கை இராணுவம்..

இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற சில மாதங்களில் எஞ்சியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும் தமிழ் பொதுமக்களும் இலங்கை இராணுவத்தால் மிகக்குறுகிய பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டனர்.

காசாவின் அழிவுக்கு இலங்கை தண்டிக்கப்படாததே காரணம்.. சர்வதேச அரங்கத்தின் குற்றச்சாட்டு | Gaza War Sri Lanka Civil War Human Rights Com

தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்திய அதேவேளை, இலங்கை இராணுவம் மனிதாபிமான உதவிகள் உட்செல்வதைத் தடுத்ததுடன், குறித்த சில பகுதிகள்மீது வான் மற்றும் எறிகணை தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்னர் அவற்றை 'யுத்த சூனிய வலயங்களாக' அறிவித்தது. மருத்துவ சேவை வழங்கல்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டன.

இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இந்தச் சம்பவங்கள் இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும் அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன.

ஜே. வி. பி. எழுச்சி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் என்பவற்றுடன் தொடர்புபட்ட விதத்தில் நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 20 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வேறு பணிகளின்போது தற்செயலாகவே கண்டறியப்பட்டன.

அண்மையில், அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியில் 1990 களில் இராணுவக் காவலின்கீழ் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் 200இற்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இன்மை மற்றும் அரசியல் தன்முனைப்பு இன்மை போன்ற காரணங்களால் இதுவரையில் இலங்கையில் எந்தவொரு மனிதப் புதைகுழி தொடர்பிலும் விசாரணைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயல்திட்டம் இன்றியமையாதது.

இது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கும் அவசியமானது." என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சிறிதரனுக்கு கோபத்தில் பதிலளித்த பிமல்: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வாய்த்தர்க்கம்

சிறிதரனுக்கு கோபத்தில் பதிலளித்த பிமல்: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வாய்த்தர்க்கம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US