காஸா எல்லையை மீண்டும் கைப்பற்றிய இஸ்ரேல்! அந்நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
காஸா எல்லையை இஸ்ரேல் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் பாலஸ்தீனியர்களுடனான மோதலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகக் கடுமையான வான்வழி தாக்குதல்களை நடத்துவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை
இந்த தாக்குதலில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும், நடன விருந்துகளிலும் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் காஸாவிற்கு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 700 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 180,000 காஸா மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர், பலர் தெருக்களில் மற்றும் பாடசாலைகளில் குவிந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.
அறிவிப்பு
காஸாவில் உள்ள கான் யூனிஸ் மருத்துவமனையில் உள்ள பிணவறை உடல்களால் நிரம்பி வழிகிறது என தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான எண்ணிக்கை கிடைக்கவில்லை மேலும், இறந்தவர்களின் உடல்களை வைக்க அதிக இடவசதி இல்லாததால், அவற்றை விரைந்து எடுத்துச் செல்லுமாறு உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் ஹமாஸ் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் உள்ளடங்களாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலில், சனிக்கிழமை நடந்த தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை.
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan