பிரபல நடிகை கயாத்ரி டயஸிடம் சீ.ஐ.டி விசாரணை
பிரபல நடிகையும், அழகுக் கலை நிபுணருமான கயாத்ரி டயஸிடம் குற்றப்புனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்கு மூலமொன்றை அவர் வழங்கியிருந்தார்.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாம் பதிலளித்து விட்டு வந்ததாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே ஊடகங்களிடம் இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணத்திற்காக தாம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேயுடன் சில நடிகைககளுக்கு தொடர்பு உண்டு என தகவல்கள் வெளியாகியிருந்தது.
எனினும் பத்மே தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதா அல்லது வேறு விவகாரம் தொடர்பிலான விசாரணையா என்பது குறித்து கயாத்ரி டயஸ் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
அண்மையில் சில நடிகைகளிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam