வெல்லாவெளியில் எரிபொருள் நிலையம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் எரிபொருள் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் நிலையம் ஒன்று வெல்லாவெளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு அருகில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யுத்ததிற்கு பின்னர் இப்பகுதியில் எரிபொருள் நிலையம் ஒன்றின் தேவை தொடர்பில் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டிய நிலையில் தற்போது எரிபொருள் நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் போரதீவுப்பற்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள், வாகன உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் நன்மையடையவுள்ளனர்.
டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri