லிட்ரோ எரிவாயு விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்
இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான விலைகள் இன்று (04.08.2023) அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தம்
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்தின் பிரகாரம் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 204 ரூபாவினாலும், 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 83 ரூபாவினாலும், 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 83 ரூபாவினாலும் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 9 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri