ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு! மரணமடைந்த குடும்ப பெண்
ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் (4) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வழமை போன்று தனது பெற்றோர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை(5) காலை எழும்பவில்லை என சந்தேகமடைந்த மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.
கசிந்த வாயு
இதன் போது குறித்த வீட்டில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து கசிந்த வாயுவினால் ஏதோ இடம்பெற்றுள்ளதை உணர்ந்த நிலையில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் புதிய வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய குடும்ப பெண்ணான அலியார் பஸ்மிலா என்பவரே மரணமடைந்தவராவார்.
மேலதிக விசாரணை
காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தை மகள் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.