பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல்! விரைந்து செயற்படுங்கள்
தற்போது நாடளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து உடன் அறிவிக்குமாறு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க இவ்வாறு பொதுமக்களுக்கு 2 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 0115811927 மற்றும் 0115811929 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.