சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட தகவல்
நாளை நண்பகல் தொடக்கம் மீண்டும் எரிவாயு விநியோகம் நடைபெறும் என்று லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த எட்டாம் திகதி 3900 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்த கப்பலுக்கான 2.5 மில்லியன் டொலர் நிலுவைத் தொகை மற்றும் தாமதக் கட்டணம் என்பன இன்று காலை லிட்ரோ நிறுவனத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாகக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகக் குறித்த கப்பல் ஒருவாரமாக கொழும்புத்துறைமுக கடற்பரப்பில் தரித்து நிற்க நேர்ந்திருந்தது.

கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பம்
இந்நிலையில் இன்று பிற்பகல் தொடக்கம் கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் சுமார் 11 நாட்களின் பின் நாளை மதியம் தொடக்கம் மீண்டும் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam