மட்டக்களப்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரி (Video)
மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் ஒரு கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (22.07.2023) இடம்பெற்றுள்ளது.
மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வியாபாரத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் போது 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த சந்தேகநபர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
