இளவாலையில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல் கைது
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஒருவரை வாளால் வெட்டி காயப்படுத்தி தப்பிச்சென்ற நால்வர் அடங்கிய குழு கைது செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரால் இன்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா நாட்டிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பனிப்புலம் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல்
சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வாள்
மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.




