கணேமுல்ல சஞ்சீவ கொலை: நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதித்துறையை சேர்ந்த பல அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய சிலர் கைது
மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் உடன் தொடர்புடைய சிலரை நாங்கள் ஏற்கனவே கைது செய்துள்ளோம்.

சஞ்சீவ இருந்த அறைக்கு முகத்தை மூடி வந்த நபர்: அடுத்தடுத்து துப்பாக்கிச்சூட்டு சத்தம் - வழங்கப்பட்டுள்ள சாட்சி
அரசாங்கம் இந்த சம்பவத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப் பெற்ற பின் அது குறித்து நடவடிக்கைகளை எடுக்க முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
