நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ படுகொலை விவகாரம்: நாமலின் கருத்துக்கு பிரதி அமைச்சர் பதிலடி

Colombo Law and Order Gun Shooting
By Dharu Feb 19, 2025 12:06 PM GMT
Report

புதிய இணைப்பு

கணேமுல்ல சஞ்சீவ என்ற போதைப்பொருள் கடத்தல்தாரி இன்றையதினம் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,


''இன்று நாடாளுமன்றில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் எதிர்தரப்பினர் கவலையடைய வேண்டாம்.

இவ்வாறான கொலைகளை தமது முறைமையாக, கலாச்சாரமாக கொண்டு வந்தவர்கள் இன்று எங்கள் அரசாங்கத்தை பார்த்து தேசிய பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாங்கள் கவலை அடைகின்றோம். மேலும், இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை நாங்கள் கைது செய்துள்ளோம்," என்றார்.

முதலாம் இணைப்பு

கொழும்பு புதுக்கடை பகுதியில் இன்றைய தினம் பாதாள உலக குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

நாட்டில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தால் மக்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட முடியும் எனவும் அவர்கள் எவ்வாறு அச்சமின்றி வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தாதியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

இலங்கையிலுள்ள தாதியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

துப்பாக்கி சூட்டு சம்பவம் 

ஊடகவியலாளர்கள் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சரை பல்வேறு கேள்விக்கணைகளினால் துளைத்திருந்தனர்.

நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ படுகொலை விவகாரம்: நாமலின் கருத்துக்கு பிரதி அமைச்சர் பதிலடி | Ganemulla Sanjeewa Death Hultsdorf Court Complex

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துள்ளதாக கூறும் அரசாங்கம் நீதிமன்றத்தில் ஒருவருக்கு பாதுகாப்பினை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு : வெளியாகும் புதிய தகவல்கள்

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு : வெளியாகும் புதிய தகவல்கள்

வெளியேறிய  அமைச்சர்

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமலேயே அமைச்சர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறி இருந்தார்.

நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ படுகொலை விவகாரம்: நாமலின் கருத்துக்கு பிரதி அமைச்சர் பதிலடி | Ganemulla Sanjeewa Death Hultsdorf Court Complex

வாகனத்தை வரவழைத்து ஊடகவியலாளரின் கேள்விகளுக்கே பதில் அளிக்காது அவர் வெளியேறியிருந்தார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US