கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி
கம்பஹா (Gampaha) கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் இன்று (8) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த இளைஞன் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் வசிப்பவரான பிரசன்ன லக்மால் டயஸ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்த நபரின் கழுத்து, வயிறு மற்றும் கையில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் இருந்ததாக கம்பஹா தலைமையக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |