காலிமுகத்திடலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிப்பு! எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன (Video)
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் அகற்றப்படாமல் எஞ்சியிருந்த கூடாரங்கள் இன்று பிற்பகல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து செல்லாமல் போராட்டக்களப் பகுதியில் தங்கியிருந்த மக்களும் அகற்றப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவருகிறது.
போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் கடந்த 10ஆம் திகதி அறிவித்திருந்தனர்.
கோட்டாகோகம போராட்டக்காரர்களின் அறிவிப்பு |
அத்துடன், போராட்டக்களத்திலிருந்து வெளியேறினாலும் கூட எமது போராட்டம் நீடிக்கும். நாங்கள் அரைவாசி வெற்றியை அடைந்தாலும் கூட இன்னும் வெற்றிகளை காண வேண்டியுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் அப்பகுதியிலிருந்து செல்லப் போவதில்லை என தெரிவித்து சில ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியிலேயே தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - நாதன்











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
