கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தொடரும் கைது
கடந்த ஒன்பதாம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினமும் 70 வரையில் கைது செய்யப்பட்டு 40 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வன்முறை சம்பவம்
வன்முறைச் சம்பவம் தொடர்பாக 854 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதன் பிரகாரம் கைது செய்யப்பட்டவர்களில் 831 பேர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தொடர்ந்தும் அறிவித்துள்ளது.

எனினும் அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டவர்களில் இருபதுக்கும் குறைவானவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வன்முறையாளர்களை திருப்பித் தாக்கிய பொதுமக்களே பெருமளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam