மைனா கோ கமவை தொடர்ந்து உருவாகும் நோ டீல் கம
அலரி மாளிகைக்கு முன்பாக இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த போராட்ட கிராமத்திற்கு ‘நோ டீல் கம’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
யார் பிரதமராக பதவியேற்றாலும் தமக்கு நியாயம் வேண்டும் என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதே சமயம், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் போராட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இராஜினாமா செய்யுமாறு கோரி மைனா கோ கம என்றழைக்கப்படும் கிராமமொன்று உருவாக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரது இராஜினாமாவைத் தொடர்ந்து மைனா கோ கம கிராமம் அகற்றப்பட்டிருந்தது.

இதேவேளை, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri