மைனா கோ கமவை தொடர்ந்து உருவாகும் நோ டீல் கம
அலரி மாளிகைக்கு முன்பாக இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த போராட்ட கிராமத்திற்கு ‘நோ டீல் கம’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
யார் பிரதமராக பதவியேற்றாலும் தமக்கு நியாயம் வேண்டும் என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதே சமயம், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் போராட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இராஜினாமா செய்யுமாறு கோரி மைனா கோ கம என்றழைக்கப்படும் கிராமமொன்று உருவாக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரது இராஜினாமாவைத் தொடர்ந்து மைனா கோ கம கிராமம் அகற்றப்பட்டிருந்தது.

இதேவேளை, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri