கஜேந்திரகுமாருக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்த சஜித்: செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க வரும் எம்.பியை கைது செய்ய முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய(07.06.2023) நாடாளுமன்ற அமர்வில் கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
"நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் 2015 மார்ச் மாதம் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார்.
அந்தவகையில் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு கஜேந்திரகுமார் எம்.பிக்கு உள்ள சிறப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,