ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் பங்கேற்பாரா! வெளியான தகவல்
இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
ஜி20 உச்சிமாநாடு
கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு முதல் முறையாக, அமெரிக்க அதிபர் பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் இந்த உச்சிமாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டது.
ஆனால், ரஷ்ய அதிபர் புடின் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்தோனேசிய அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்
உக்ரைன் போர் விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்காக இந்த மாநாட்டில் இருந்து புடின் ஒதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புடின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று ஜி20 நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் லஹட் பின்சார் பாண்ட்ஜைத்தான் தெரிவித்துள்ளார்.




