ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு: அநுர அரசு தொடர்பில் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

Batticaloa Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka
By Dharu Dec 03, 2024 07:40 PM GMT
Report

அண்மையில் ஆட்சிப்பீட மேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப் போவதாக தேர்தல் பிரசாரங்களில் கூறியதின் காரணத்தால் இலங்கையின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசன்(Gnanamuththu Srineshan), தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

“ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1979 இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அதி பயங்கரமானது.அது ஜனநாயகத்துக்கும் அடிப்படை உரிமைக்கும் எதிரானது.

இனவாதத்தை தூண்டும் தோல்வி கண்ட குழுக்கள்: பிரதமர் விமர்சனம்

இனவாதத்தை தூண்டும் தோல்வி கண்ட குழுக்கள்: பிரதமர் விமர்சனம்

15 ஆண்டுகள்

பல அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியது. அப்பாவிகளின் உயிர்களையும் குடித்தது.

அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்காக சித்திரவதைகள் மூலமாக ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு உதவியது.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு: அநுர அரசு தொடர்பில் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு | G Sirinesan Points Out The Anuradhapura Government

பல தமிழர்களை நடைப் பிணங்களாக மாற்றியது. மனிதகுலம் வெட்கித் தலை குனியக் கூடிய அனைத்துக் கொடூரங்களையும் அச்சட்டம் செய்தது. இப்படியான கொடூரச் சட்டம் தற்காலிகமாகவே கொண்டு வரப்பட்டது.

ஆனால், 45 ஆண்டுகளாக நிலையாக நிற்கின்றது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளாகியும் அந்த சட்டத்தை நீக்க அதிகார வர்க்கத்தால் முடியவில்லை.

அதனைச் செய்யாது தவிர்த்தால்,பச்சை,நீலக் கட்சிகளின் பாதைகளில் பயணிக்கும் கட்சியாகவே சிவப்புக்கட்சியும் அமைந்துவிடும். அதாவது ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,பொதுசனப் பெரமுன போன்ற கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

இதனை உணர்ந்து தேசியமக்கள் சக்தி செயற்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாடு அழிவுப்பாதையை நோக்கியே சென்றது.

அரசின் அணுகுமுறை தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கவலை

அரசின் அணுகுமுறை தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கவலை

பயங்கரவாதத் தடைச்சட்டம்

இதனை தேசிய மக்கள் சக்தி புரியாது விட்டால், நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் ஜேவிபியினரின் உயிர்களையும் குடித்திருந்தது என்பதை தேசிய மக்கள் சக்தி நன்கறியும்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு: அநுர அரசு தொடர்பில் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு | G Sirinesan Points Out The Anuradhapura Government

அதிகார இருப்பால் அதனை மறக்க முடியாது.மறைந்த உறவுகளையும் நினைவேந்தத் தடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அடிப்படை உரிமைக்கு விரோதமானதாகும்.

அண்மையில் நினைவேந்தல் செயலால் மூன்று தமிழர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை கண்டனத்திற்குரிய விடயமாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதையில் சறுக்கல் ஏற்படக்கூடாது. கைதானவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US