இலங்கையில் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் - மத்திய வங்கியின் பரிந்துரை
கிரிப்டோ கரன்சியை தொடரும் முறை தொடர்பில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உயர் மட்டக் குழுவை நியமிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
இவ்வாறு ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டால், இலங்கை கிரிப்டோகரன்சிகளை எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்து சில கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு பரிந்துரைகள் வழங்கப்படும்.
கிரிப்டோ கரன்சி
தற்போதைய அமைச்சர்கள் சிலர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக சொத்து அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, கிரிப்டோ கரன்சி தொடர்பில் சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
இவ்வாறிருக்க, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்த மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கிரிப்டோ கரன்சி தொடர்பாக தற்போது எந்த சட்டமும் இல்லை என கூறியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
