“இந்தியா - இலங்கை இடையிலான இராணுவ பயிற்சி இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்”
இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையிலான கூட்டு 12 நாள் பாரிய இராணுவப் பயிற்சி, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் பங்களிப்பு செய்யும் என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவப்படைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே (Manoj Mukund Naravane) , இந்த இராணுவப் பயிற்சியை கடந்த வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
இந்திய மற்றும் இலங்கை இராணுவத்திற்கு இடையேயான மித்ர சக்தி 21ஆவது பயிற்சியின் 8 வது பதிப்பு, இலங்கையின் கிழக்கு அம்பாறையில் முடிவடைந்ததாக இந்திய இராணுவம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 4 முதல் 15 வரை 12 நாள் பாரிய இராணுவப் பயிற்சி மாவட்டத்தில் உள்ள போர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.
ஜெனரல் நரவனே சனிக்கிழமையன்று இலங்கை கடற்படையின் தலைமையகத்திற்குச் சென்று அதன் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதன்ன (Nishantha Ulugetanna) மற்றும் அதிகாரிகளுடன் உரையாடினார்.பின்னர், அவர் இலங்கை விமானப்படையின் தலைமையகத்திற்கும் விஜயம் செய்தார்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan