சிம்பாப்வேயில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி! இறுதிச் சடங்குகளுக்கு முன்னுரிமை
சிம்பாப்வேயில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் மருத்துவச் செலவுகள் காரணமாக, மக்கள் தங்கள் வாழ்நாளில் சிகிச்சை பெறுவதை விட, கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
இதற்கு உதாரணமாக, ஹராரேவைச் சேர்ந்த 60 வயதான ஸ்டீவர்ட் காண்டா (Steward Ganda) என்பவரின் மரணம் அமைந்துள்ளது.
இறுதிச் சடங்கு
கால்களில் ஏற்பட்ட கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்த இவருக்கு, சிறுநீரகம் தொடர்பான சிகிச்சை அளிக்க ஒரு சிறப்பு மருத்துவரை அணுக சுமார் $600 (அமெரிக்க டாலர்) தேவைப்பட்டது.

போதிய சேமிப்பு இல்லாததால் அவரது குடும்பத்தால் அந்தப் பணத்தைத் திரட்ட முடியாமல் போனது. இதன் விளைவாக, முறையான சிகிச்சையின்றி அவர் காலமானார். வேதனையான விஷயம் என்னவென்றால், உயிருடன் இருந்தபோது தனது மருத்துவச் செலவிற்காக மாதம் $200 காப்பீட்டுத் தொகையைச் செலுத்த வசதியில்லாத காண்டா, தனது இறுதிச் சடங்கிற்காக மட்டும் மாதம் $11 வீதம் ஒரு தனியார் நிறுவனத்தில் சந்தா செலுத்தி வந்துள்ளார்.
இதன் காரணமாக, அவர் வறுமையில் இறந்தாலும், அவரது இறுதிச் சடங்கு மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. ஜிம்பாப்வேயில் தற்போது நிலவும் நிலவரப்படி, 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் முறையான வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கவலை
இதனால் மாதந்தோறும் அதிகப் பணம் கட்டி மருத்துவக் காப்பீடு பெறுவது அவர்களுக்குச் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.

மருத்துவக் காப்பீட்டுடன் ஒப்பிடுகையில், இறுதிச் சடங்கு காப்பீடுகள் (Funeral Insurance) மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாலும், அந்நாட்டின் கலாச்சாரத்தில் இறுதிச் சடங்குகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தினாலும் மக்கள் இதனையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.
"பிழைப்பதை விட இறப்பதற்கே மக்கள் தயாராக உள்ளனர்" என்பதை இந்தச் சூழல் உணர்த்துவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் பலவும், ஒருவேளை உடல்நலம் பாதிக்கப்பட்டால் சிகிச்சை பெறப் பணம் இருக்காது என்பதை உணர்ந்தே, குறைந்தபட்சம் கண்ணியமான அடக்கமாவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய இறுதிச் சடங்கு காப்பீடுகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 மணி நேரம் முன்
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam