பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் யாழ். பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் தில்காந்தி! (VIDEO)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி விரிவுரையாளர் மறைந்த தில்காந்தி நவரட்ணத்தின் இறுதிக் கிரியைகள் மொனராகலை மரகலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் கடந்த செய்வாய்கிழமை உயிரிழந்தார்.
அதிகாலை 5 மணி அளவில் சுகயீனம் காரணமாக மொனராகலை, சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி உயிரிழந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றிலிருந்த அவர் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் கல்வி கற்று, தற்காலிக உதவி விரிவுரையாளராக தெரிவாகியிருந்தார்.
அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோதே தமது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.