தேசிய இராணுவ வீரர்களின் நினைவு தினத்திற்காக விநியோகிக்கப்படவுள்ள கொடிகள்
இலங்கையின் தேசிய இராணுவ வீரர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு கொடி விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வின் முதல் கொடி விநியோகம் இன்று (06.05.2024) வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
விசேட நிகழ்வு
2024 ஆம் ஆண்டின் தேசிய இராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ சேவை அதிகார சபையின் மூலம் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுக்காக நிதி திரட்டும் முயற்சியின் ஒரு செயற்பாடாக இந்த கொடி விநியோகம் அமைந்துள்ளது.
இதன்போது முதல் கொடியானது வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அவர்களுக்கு படை வீரர் ஒருவரால் வழங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்தக் கொடிகள் விநியோகிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |