முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி
திருகோணமலை (Trincomalee) - முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரிக்கு பாண்ட் வாத்திய உபகரணங்கள் செயற்றிட்டத்திற்காக 500,000.00 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் குறித்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் அதிபர் எம் . மன்சூர் அலியின் உத்தியோகபூர்வ நிதி ஒதுக்கீட்டு கடிதம் இன்று (01) கல்லூரியில் வைத்து கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து சிறப்பித்தோர்
இந்நிகழ்வில் தம்பலகமம் மத்திய குழுத் தலைவரும் அரசியல் அதிகார உயர்பீட உறுப்பினருமாகிய ஆசிரியர் M.S.ஐயூப் கான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் M.I. நஜிமுல்லா, மத்திய குழு செயலாளர் ஆசிரியர் H.M.ஹனீஸ், மத்திய குழு உறுப்பினர்களான அஜீஸ் ஜபருள்ளா, A.S.ஹைருள்ளா, E.L. அறூஸ், A.M. நௌபர் மற்றும் M.I. நஹ்ஸீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |